நினைவருக்கா...?
பாகம் – 2 👁️ “மீண்டும் அதே கனவா…?” அவள் அருகில் அமர்ந்திருந்த வயதானவர் மெதுவாகக் கேட்டார். அவரின் குரலில் கவலை தெரிந்தது. அதை உணர்ந்தவள், “அப்படி லாம் ஒன்றும் இல்லை uncle…” என்று மெல்லிய சிரிப்புடன் கூறினாள். ஆனால் அந்த சிரிப்பு… அவள் கண்களில் எட்டவே இல்லை. அந்த வயதானவர் கையில் இருந்த மாத்திரை மற்றும் மருந்தைக் கண்டவுடன், அவள் முகம் சுளிந்தது. “Uncle… இதுக்கு முடிவே இல்லையா?” அவள் சோர்வாகக் கேட்டாள். அந்த பெரியவர் சிறிது நேரம் அவளைப் பார்த்தார். பிறகு மெதுவாக சிரித்தார். “இது உன் நலனுக்குத்தான் மா…” என்று கூறி மாத்திரையையும் தண்ணீரையும் அவளிடம் நீட்டினார். வேறு வழியில்லாமல், அவளும் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டாள். “எதுவும் யோசிக்காமல்… நிம்மதியாக தூங்கு.” அவர் அவளின் தலையை மெதுவாகத் தொட்டு, அறையின் விளக்கை மங்கலாக்கிவிட்டு வெளியேறினார். கதவு மெதுவாக மூடிய சத்தம் கேட்டது. சில நொடிகள்— அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். பிறகு… அவர் சென்றுவிட்டதை உறுதி செய்தவள், மெதுவாக வாயைத் திறந்தாள். அவள் விழுங்கியதாக நடித்த மாத்திரை… இன்னும் அவள் நாக்கின் கீழே இருந்தது. அதை எடுத்...